மேலவளவு சோமகிரி மலை கருப்புக் கோவிலில் உண்டியல் பணம் கொள்ளை
மேலூர், அக். 5–
மேலூர் அருகே உள்ள மேலவளவு சோமகிரி மலையில் உள்ளது கருப்புக் கோவில். இந்த பகுதியில் பிரசித்தி பெற்ற கருப்புக் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வதுண்டு.
இவர்கள் காணிக்கை செலுத்த வசதியாக கோவிலில் உண்டியல் வைக்கப்பட்டு உள்ளது. நேற்று இரவு இதனை யாரோ உடைத்து அதில் இருந்த காணிக்கையை கொள்ளையடித்துள்ளனர். மேலும் கோவிலின் பீரோவையும் உடைத்து அதில் இருந்த சில பொருட்களையும் அபகரித்து சென்றுள்ளனர்.
இந்த துணிகர கொள்ளை குறித்து கோவில் பூசாரி பொன்னம்பலம், மேலவளவு போலீசில் புகார் செய்தார். சப்–இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளும் சேகரிக்கப்பட்டன.
மேலூர் அருகே உள்ள மேலவளவு சோமகிரி மலையில் உள்ளது கருப்புக் கோவில். இந்த பகுதியில் பிரசித்தி பெற்ற கருப்புக் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வதுண்டு.
இவர்கள் காணிக்கை செலுத்த வசதியாக கோவிலில் உண்டியல் வைக்கப்பட்டு உள்ளது. நேற்று இரவு இதனை யாரோ உடைத்து அதில் இருந்த காணிக்கையை கொள்ளையடித்துள்ளனர். மேலும் கோவிலின் பீரோவையும் உடைத்து அதில் இருந்த சில பொருட்களையும் அபகரித்து சென்றுள்ளனர்.
இந்த துணிகர கொள்ளை குறித்து கோவில் பூசாரி பொன்னம்பலம், மேலவளவு போலீசில் புகார் செய்தார். சப்–இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளும் சேகரிக்கப்பட்டன.
பதிவு செய்த நாள்
: சனிக்கிழமை, அக்டோபர் 05, 9:01 PM IST
பதிவு செய்த பத்திரிக்கை :மாலைமலர் இணையதளம்Click Here